Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதல் ஓராண்டாக புதுச்சேரி மாநில காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றி வந்த சுந்தரிநந்தா, கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக மிசோரம் மாநிலத்தில் டிஜிபியாக பணியாற்றிவந்த பாலாஜி ஸ்ரீவத்சவாவை புதுச்சேரி மாநில டிஜிபியாக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள பாலாஜி ஸ்ரீவத்சவா கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுகொண்டார். இதனைதொடர்ந்து நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.